வயநாடு தந்த எச்சரிக்கை… மலை பிரதேசங்களை மீட்க அரசு செய்ய வேண்டியது என்ன?! | What should the government do to save hill stations

ஆண்டுதோறும் உதகையில் நடைபெறும் மலர்க் கண்காட்சியை மேட்டுப்பாளையம் அல்லது பொள்ளாச்சிக்கு மாற்றவேண்டும். சுமார் 25-30 ஆண்டுகளுக்கு முன்னர், உதகையைச் சுற்றுலாத்தலமாகப் பிரபலப்படுத்த இத்தகைய விழாக்கள் தேவைப்பட்டன. ஆனால் இப்போது குறிப்பிட்ட அந்த ஒரு வாரக் காலத்திற்கு மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் உதகையில் கூடுகிறார்கள், அம்மலைகளுக்கு அது மிகப்பெரிய அழுத்தமாக அமைகிறது. தமிழ்நாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் நீர்மின் திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்யவோ புதிய நீர்மின் திட்டங்களைத் தொடங்கவோ கூடாது. நீலகிரியில் நிலச்சரிவு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும், அவற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிக்கக்கூடிய வகையிலும் ‘மாநில நிலச்சரிவு மேலாண்மை மையம்’ மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்படவேண்டும். அதன் மற்றொரு மையம் வத்தலக்குண்டுவில் அமைக்கப்படவேண்டும்.

இறுதியாகக் கஸ்தூரி ரங்கன் அளித்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிய அரசு மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகளைச் சூழல் கூருணர்வு மிக்க மண்டலமாக அறிவிப்பு செய்வதற்கான வரைவு அறிக்கையை 06.07.2022ல் வெளியிட்டிருந்தது. உடனடியாக இந்த வரைவு அறிவிக்கையைக் கேரளா, கர்நாடகா மாநிலங்களுடன் கலந்தாலோசித்து, இறுதி செய்து அரசிதழில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடங்க வேண்டும். நமக்கு எல்லா வளங்களையும் அளித்து நம்மைப் பாதுகாத்த மண் இப்போது நம்மை காவுவார்கள் ஆரம்பித்திருக்கிறது. இதற்கு இயற்கை காரணமல்ல, நாம் மட்டுமே காரணம். இம்மண்ணின் மீது நாம் நிகழ்த்திய வன்முறைக்கான எதிர்வினையை இப்போது நாம் அனுபவிக்கிறோம். இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தி, நாம் செய்த தவறுகளைச் சரிசெய்வதே இப்போது நம்முன் உள்ள முக்கியமான பணி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டை உலுக்கிய வயநாடு நிலச்சரிவு குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல பிரிவு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பான விசாரணையில், `வயநாடு சம்பவத்தை தமிழக அரசு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழக மலையூர்களில் குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்ட மலை கிராமங்கள், நகரங்களில், அரசும் உள்ளாட்சி நிர்வாகமும் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை தீர்ப்பாயம் தெரிந்துகொள்ள விரும்புகிறது. இதுகுறித்து, தமிழக அரசின் தலைமை செயலர், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை செயலர், தமிழக பேரிடர் மேலாண்மை துறை, நீலகிரி, கோவை கலெக்டர்கள் ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.’ என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *