மருதமலை: முருகன் கோயில் கடைவீதி பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகள் – நடவடிக்கை எடுக்கப்படுமா?!

முருகப்பெருமானின் ஏழாவது படை வீடு என அழைக்கப்படும் மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் ஏராளமான கடைகள் நிறைந்து நுழைவாயில் பிரகாசமாகத்தான் காணப்படுகிறது. ஆனால் அக்கடைகளுக்கு பின்னால் முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு குப்பைகளும் கழிவுகளும் அதிகம் கொட்டப்படுகின்றன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்கு நிலவும் மோசமான நிலைக்கு பொதுமக்களின் பொறுப்பின்மையும் காரணம் என குற்றம்சாட்டுகிறார்கள் அப்பகுதியினர். சமூக அக்கறை இல்லாமல் அவர்கள் பயன்படுத்திய உணவுக் கழிவுகளையும், பாலித்தீன் பைகளையும் கண்ட இடங்களில் தூக்கி வீசி செல்கின்றனர் என்றும் இதுகுறித்து கோயில் நிர்வாகமும் கண்டு கொள்வதாயில்லை என்றும் அங்குள்ள மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

அங்குள்ள கால்நடைகள் குப்பைகளில் உள்ள உணவு பொருட்களை உண்பதோடு பாலித்தீன் பொருட்களையும் சேர்த்து உண்பதால் பல்வேறு நோய்களோடு, சிலசமயம் உயிரிழப்பு வரை எதிர்கொள்ள நேரிடுகிறது. தனித்து விடப்பட்ட கால்நடைகள் ஆங்காங்கே கேட்பாரின்றி அலைந்துக் கொண்டிருக்கின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் அங்குள்ள சில உணவகங்களின் பாத்திரங்கள் இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தில் வைத்து சுகாதாரமற்ற முறையில் கழுவப்படுகின்றன என்றும் அதற்கு சரியான இடவசதி இல்லை என்பதே காரணம் என்றும் கூறுகிறார்கள்.

அரசு மற்றும் கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மருதமலை சுற்றுப்பகுதியின் சுகாதார நிலையை மேலும் மோசமடையாமல் தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *