ADR Report: `151 சிட்டிங் MP, MLA-க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்’ – ஆய்வறிக்கை தகவல்! | 151 sitting MPs and MLAs have cases related to crimes against women

இந்தப் பட்டியலில் மேற்கு வங்கத்தில் 25 சிட்டிங் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதால், மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திராவில் 21 எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களும், ஒடிசாவில் 17 எம்.பி-க்கள், எம்.எல்.ஏ.க்களும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கை எதிர்க்கொண்டிருக்கின்றனர்.

இவர்களில் 14 சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள், 2 சிட்டிங் எம்.பி-கள் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376-ன் கீழ் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை எதிர்க்கொண்டிருக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாம்.

அரசியல் கட்சிகள் அடிப்படையில் கவனித்தால், பா.ஜ.க (54 எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள்) அதிக எண்ணிக்கையில் முன்னணி வகிக்கிறது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 23, தெலுங்கு தேசம் கட்சி 17 பேர் பெண்கள் தொடர்பான வழக்குகளில் சிக்கியிருக்கின்றனர். பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலும் தலா 5 எம்.பி-க்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *