இந்த நிலையில், நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக கங்கனா ரனாவத் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “நான் பாதுகாப்பாக இருக்கிறேன். விமான நிலையத்தில் எனக்கு சோதனை முடிந்த பிறகு, மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர், நான் அவரை கடப்பதற்காக வேறு கேபின் அருகே காத்துக்கொண்டிருந்தார்.
பின்னர், பக்கவாட்டிலிருந்து திடீரென என் முகத்தில் அடித்தார். ஏன் என்ற கேட்டபோது, இது `விவசாயிகள் போராட்டத்துக்கானது” என்று அவர் கூறினார். பஞ்சாப்பில் தீவிரவாதம் அதிகரித்துவிட்டது. இதைச் சரிசெய்ய வேண்டும்” என்று கங்கனா ரனாவத் கூறியிருக்கிறார். இப்படி கூறினாலும், உண்மையில் இவர் அந்த இடத்தில் தாக்கப்பட்டதற்கான உறுதியான சிசிடிவி காட்சிகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.