குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண்ணை தாக்கிய பெண் காவலருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து விருதுநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம் சூலக்கரை சேர்ந்தவர் லட்சுமணன். விருதுநகர் மதிமுக மாவட்ட அவைத்தலைவராக உள்ளார். இவரின் மனைவி ஞானமணி. அதேப்பகுதியை சேர்ந்தவர்கள் தாய்-மகளான மாரியம்மாள், தீபமணி. இதில் தீபமணி விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த இரு குடும்பத்தினரும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சூலக்கரை பகுதியில் அருகருகே வசித்து வந்துள்ளனர். அப்போது குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஞானமணிக்கும்- மாரியம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் மாரியம்மாள் தனது மகளான தீபமணியை வரவழைத்து ஞானமணியை கண்டிக்கச் சொல்லிஉள்ளார்.
இந்தநிலையில் வீட்டிற்கு வந்த தீபமணி, தனது தாயுடன் சண்டையிட்டதற்காக ஞானமணியை கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாய்தகராறில் ஆத்திரமடைந்த பெண்காவலர் தீபமணி, அங்கிருந்த கிரிக்கெட் மட்டையால் ஞானமணியை தாக்கியுள்ளார். இதில் ஞானமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சூலக்கரை காவல்நிலையத்தில் லெட்சுமணன் புகார் அளித்தார். அதன்பேரில், மாரியம்மாள் மற்றும் பெண் காவலர் தீபமணி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து இதுதொடர்பான வழக்கு விசாரணை விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தநிலையில், தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட மாரியம்மாள் மற்றும் பெண் காவலர் தீபமணி ஆகியோரின் மீதான குற்றங்கள் தகுந்த சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டதால் மாரியம்மாளுக்கு அபராதமும், பெண் காவலர் தீபமணிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது’ என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88