கள்ளக்குறிச்சி: வீடுகளுக்கு சென்று காசோலை வழங்கினாரா உதயநிதி?! – அமைச்சர் பதிலால் எழுந்த விமர்சனம் | minister comment on udhaynithi program, creates controversy

அதில் கடுப்பான பாதிக்கப்பட்ட மக்கள், ` செத்துப் போனவங்க பக்கத்துல இருந்து அழக் கூட முடியாம இங்க உக்கார வச்சிட்டீங்களே’ என்று அதிகாரிகளிடம் குமுறினர். அதையடுத்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு அங்கு வந்து சேர்ந்த அமைச்சர் உதயநிதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு காசோலைகளை வழங்கினார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. இந்த நிலையில்தான் 21-ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களைப் பார்க்க வந்திருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்குச் சென்று அரசின் ரூ.10 லட்சம் நிவாரண உதவிகளை வழங்கும்படி முதலமைச்சர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்குச் சென்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அவர்கள், ரூ 10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்’ என்று தெரிவித்தார். அந்த கருத்துதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமரவைத்து, பின்னர் உதயநிதி வந்த பிறகு காசோலை வழங்கப்பட்ட நிலையில், அமைச்சர் உதயநிதி இல்லம் இல்லமாக சென்று காசோலை வழங்கியதாக அமைச்சர் சொல்லி இருக்கும் கருத்து விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *