ஆக.9-ம் தேதி காலையில் போலீஸ் டைரியில் பெண் மருத்துவர் கொலை பற்றி குறிப்பு பதியப்பட்டு உள்ளது. எனினும் இரவு 11.45 மணிக்குத்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மைதானா?. காலை 10.10 மணிக்கு கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை பற்றி போலீஸ் பொது டைரியில் குறிப்பு பதியப்பட்டுள்ளது. கொலை நடந்த இடத்தை போலீஸ் தன் கட்டுப்பாட்டில் இரவு 11.30 மணிக்குத்தான் கொண்டு வந்துள்ளது. காலை 10.10 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை என்ன நடந்தது” என்று கேள்வியெழுப்பியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு ‘உயிரிழந்த பெண்ணின் தந்தையின் அனுமதி இல்லாததால் தான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது’ என கொல்கத்தா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்தசூழலில் மாணவியின் மரண வழக்கு மட்டும் அல்லாது மருத்துவமனையில் நடந்த நிதி முறைகேடு தொடர்பாகவும் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சூழலில்தான் சஞ்சய் ராய்யை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சஞ்சய் ராய்யிடம், ‘உண்மை கண்டறியும் சோதனைக்கு ஏன் ஒப்புக்கொண்டீர்கள்’ என, நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருக்கிறது. அதற்கு அவர், “நான் நிரபராதி. என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. ஒருவேளை இந்த சோதனை அதை நிரூபிக்கும்” என தெரிவித்திருக்கிறார். அதோடு ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் 4 டாக்டர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு அடுக்கடுக்கான மர்மங்கள் சூழ்ந்திருப்பது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88