இந்த நிலையில், சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் அனைத்து விஷயங்களையும் மெதுவாகத் தெரிந்துகொள்வீர்கள் என ஆளும் என்.டி.ஏ கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்திருக்கிறார்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் நேற்று ஊடகத்திடம் பேசிய நிதிஷ் குமார், “சிறப்பு அந்தஸ்து குறித்து தொடர்ந்து மத்திய அரசிடம் பேசிவருகிறேன். எங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதி வழங்குங்கள் என்று அவர்களிடம் சொன்னேன். அதன் தொடர்ச்சியாக, நிறைய நிவாரணங்களை அறிவித்திருக்கிறார்கள்.

