

சமூகநீதி மற்றும் பொறுப்புக்கு காமராஜரே அடிகோலிட்டவர். தமிழகத்தில் அவரது ஆட்சிக்காலம் பொற்காலமாகும். ஆனால் தற்போது, தமிழ்நாட்டில் சமூகநீதியைப் பற்றி பேச மட்டுமே செய்கிறார்கள். கடந்த ஆண்டில் செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதிகளில் கள்ளச்சாராயத்தினால் பலர் பலியானார்கள். ஆனால் அது குறித்த விசாரணையோ பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதியோ பெற்று தரப்படவில்லை. தற்போது கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்தே கிட்டத்தட்ட 14 மாதங்களுக்குப் பிறகு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் பகுதிகளில் கள்ளச்சாராயத்தினால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான வழக்கிற்கு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த பாகுபாடும் அலட்சியப்போக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல” என பேசினார்.