இதே சிவக்குமார்தான், கடந்த மக்களவைத் தேர்தலின்போது, பெங்களூரு புறநகர் தொகுதியில் போட்டியிட்ட தன்னுடைய சகோதரர் டி.கே.சுரேஷுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தபோது, ‘நாங்கள் உங்களுடன் டீல் பேச வந்திருக்கிறேன். நீங்கள் என் சகோதரரை வெற்றிபெறச் செய்தால், அவர் உங்களுக்கு காவிரியிலிருந்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வார்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நல்ல வழியிலோ, மோசடியாகவோ மேக்கேதாட்டூ அணையைக் கட்டி, அங்கிருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் கொண்டுவருவோம் என்பதை தேர்தல் பிரசாரத்தில் மக்களுக்கு தெரிவிக்கவே அவ்வாறு கூறினேன்’ என விளக்கம் தந்தார் டி.கே.சிவக்குமார். ‘மேக்கேதாட்டூ அணையால் கர்நாடகாவைவிட தமிழகத்துக்குத்தான் அதிக நன்மை கிடைக்கும்’ என்று டி.கே.சிவக்குமார் இப்போது கூறுவதன் சூட்சுமம் இதுதானா?!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88