`அரசியலில் தொடர வேண்டுமா என சில சமயங்களில் யோசித்துள்ளேன்…’ – மனம் திறந்த அண்ணாமலை! | Annamalai opens about his political life

அந்த அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவையில் நடந்த நிகழ்வில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பேசிய வானதி சீனிவாசன், “அண்ணாமலை உங்களுக்கு அன்புடன் அண்ணா. ஆனால் எனக்கு அன்புடன் தம்பி. அரசியல் தெரியாதவர்கள் கூட அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும். அண்ணாமலை வெற்றி பெறுவாரா என நாடு முழுவதும் இருந்த பலர் என்னிடம் கேட்டார்கள்.

வானதி சீனிவாசன்வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

பொது வாழ்க்கையில் தொடர்ச்சியாக இயங்குவதும், மக்களுக்கு தொண்டு ஆற்றுவதும் தான் கடமை. வாய்ஸ் ஆஃப் கோவை அமைப்பினரை மட்டும் அழைத்து பாராட்டியிருந்தால், அண்ணாமலை தனியாக கட்சி ஆரம்பித்து விட்டார் என புரளி கிளப்பி விட்டிருப்பார்கள். ஆனால் பாஜக நிர்வாகிகளையும் இங்கு அழைத்திருப்பதால், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *