'எடப்பாடிக்கும், வேலுமணிக்கும் இடையே பிரச்னை?' – சொல்கிறார் அண்ணாமலை

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “2019 நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தது. அவர்களின் கூட்டணியில் இடம்பெற்று பாஜக  வரலாறு காணாத தோல்வியடைந்தோம்.

அண்ணாமலை

2024 தேர்தலில் அதிமுக – பாஜக ஒன்றாக இருந்தால் 35 சீட்களில் வெற்றி பெற்றிருப்போம் என்று வேலுமணி கூறுகிறார். வேலுமணியின் கருத்தைப் பார்க்கும்போது அவருக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உட்கட்சி பிரச்னை இருப்பது போல தெரிகிறது.

எஸ்டிபிஐ போன்ற அடிப்படைவாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டால் என்ன ஆகும் என்பதை அதிமுக தலைவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்.

வேலுமணி

எல்லா சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக எம்எல்ஏக்கள் இருக்கும் கோவை மாவட்டத்தில், மூன்று சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளனர். அந்த விரக்தியின் உச்சத்தில் எஸ்.பி வேலுமணி  பேசிக் கொண்டிருக்கிறார்.

ஆட்டை கொண்டு வந்து நடுவழியில் வெட்டுவது அதை கொடூரமாக படமெடுத்து சமூக வலைதளங்களில் போடுவது தவறு. ஆட்டை வெட்டும் திமுக காரர்களுக்கு கோபம் இருந்தால் , ஆட்டை விட்டுவிட்டு என்னை வெட்டுங்கள்.ம் இதுதான் எனது ஊர் .  திமுக தொண்டனுக்கு கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *