கடந்த மூன்று ஆண்டுகளில் இதற்கு முன்பு இருந்ததை விட பன்மடங்கு போதைப்பொருள் நடமாட்டம் உயர்ந்திருக்கிறது. இதனால் நடைபெறும் மரணங்கள் அதிகரித்திருக்கிறது. மது குடித்துவிட்டு தெருவில் விழுந்து இறந்து கிடக்கிறார்கள். அதையெல்லாம் மதுவால் இறந்ததாக அரசு கருதவில்லை, அரசின் அலட்சியத்தால் அராஜகத்தால் இவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களால் வசூல் பண்ணுவதற்காக அனுமதிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தால் 63 பேர் உயிரிழந்ததற்கு பணத்தை கொடுத்து வாயை அடைக்கிறார்கள்.
இந்த மாதிரியான போக்குகளில் தான் தமிழக அரசு இருக்கிறது. திமுக இதனை கொண்டாடி கொண்டிருக்கிறது.


ஆம்ஸ்ட்ராங் கொலைக்காகவும், கள்ளச்சாரய மரணத்தை எதிர்த்தும்… திமுக அரசை தட்டிக்கேட்க வேண்டிய சு.வெங்கடேசன், கம்யூனிஸ்ட் கட்சியினரே நீங்கள் பூர்ஷ்வாக்களாக, சங்கீகளாக மாறிவிட்டீர்களா என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறீர்கள். மதுரை மண்ணிலிருந்து செங்கோலுக்கு எதிராக நீங்கள் இப்படி பேசியிருக்கக் கூடாது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb