இதையறிந்த முத்துக்கிருஷ்ணன், கார் என்ஜின் முறைகேடு குறித்து தனியார் கார் ஏல நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால், ஏல நிறுவனம் அதற்கு முறையான பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. தொடர்ந்து, காரை திரும்பப்பெற்றுக்கொண்டு, தான் கொடுத்த பணத்தை திருப்பிதரும்படி ஏல நிறுவன அதிகாரிகளுக்கு முத்துக்கிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு, பொய்யான காரணங்களை சொல்லி முறையான பதில் அளிக்காத நிலையில், இந்த மோசடி குறித்து கடந்த ஜனவரியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிமன்றத்தில் முத்துகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தி, வழக்கில் தீர்ப்பளித்தார்.
அதன்படி, `ஸ்ரீராம் ஆட்டோமால் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தான் விற்பனை செய்த பொலிரோ காரை முத்துக்கிருஷ்ணனிடம் இருந்து திரும்ப பெற்றுக்கொள்ளவேண்டும். அதோடு, காருக்காக செலுத்திய மொத்த தொகை ரூ.2,66,136-ஐ முத்துகிருஷ்ணனுக்கு திரும்ப வழங்கவேண்டும். அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு லட்ச ரூபாயும், வழக்கு செலவுத்தொகையாக 10,000ரூபாயும் சேர்த்து மொத்தம் ரூ.3,76,136-ஐ நஷ்ட ஈடாக 6 வார காலத்திற்குள் கார் ஏல நிறுவனம் வழங்கவேண்டும். தவறும் பட்சத்தில் வழக்கு செலவுத் தொகை நீங்கலாக உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து தொகையினை முத்துக்கிருஷ்ணனுக்கு வழங்கவேண்டும்” என நீதிபதி சக்கரவர்த்தி தீர்ப்பளித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88