கும்மிடிப்பூண்டி இளைஞர் தீக்குளிப்பு விவகாரம்; ராமதாஸ், அண்ணாமலை தமிழக அரசுக்குக் கண்டனம்! | youth sets himself fire in gummidipoondi while officials demolishing his house

இதற்கிடையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை,“இந்த தி.மு.க ஆட்சியில் ரியல் எஸ்டேட் முதலாளிகள் பலன்களையும், சலுகைகளையும் அனுபவிக்கும் அதே வேளையில், சாமானியர்களின் வீடுகள் சட்டவிரோதக் கட்டுமானங்களாக இடிக்கப்படுகின்றன. சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை அரசு அதிகாரிகள் இடிக்க விடாமல் தடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் தீக்குளித்துள்ளார்.

ஆனால் மாநில வீட்டு வசதித்துறை அமைச்சரும், மாநில மதுவிலக்குத்துறை அமைச்சருமான முத்துசாமி, தீபாவளிக்கு முன்னதாக டாஸ்மாக்கில் 90 மில்லி பாட்டில்களை அறிமுகப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஆனால், தி.மு.க அரசு தமிழகத்தின் முன்னுரிமைகள் குறித்து தொடர்ந்து பேசிவருகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *