‘கைகொடுக்காத பிரேமலதாவின் அரசியல் நகர்வுகள்’ – இனி தேறுமா தேமுதிக?! | The Premalatha strategy that was not taken. What will happen to the DMDK?

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “கூட்டணி அமைப்பதில் சரியான முடிவு எடுக்காதது, விஜயகாந்தின் மரணம் போன்றவை தேமுதிகவை பெரும் வீழ்ச்சிக்கு கொண்டு சென்றுவிட்டது. இந்தசூழலில்தான் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் விஜய பிரபாகரனுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. இதற்கு விஜயகாந்த் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாபம் மட்டும்தான் காரணம். கூடவே அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியும் கைகொடுத்துள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் வெற்றி கை நழுவி போனது. அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் அவர் நின்றால் கூட இந்த அளவுக்கு வாக்குகளை பெற முடியுமா? என்பது சந்தேகம்தான். வரக்கூடிய இரண்டு ஆண்டுகள் தே.மு.தி.க-வுக்கு மிகவும் முக்கியமானது. பொது மக்களின் பிரச்னைகளுக்கு மிகவும் அழுத்தமாக குரல் கொடுக்க வேண்டும்.

குபேந்திரன்குபேந்திரன்

குபேந்திரன்

சோர்வடைந்த தொண்டர்களை மீண்டும் உற்சாகமடைய செய்யும் வகையில் கூட்டங்களை நடத்துவது, சரியான நபர்களை தேர்வு செய்வது போன்றவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்போதுதான் தே.மு.தி.க தமிழக அரசியல் களத்தில் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். ஏனெனில் அனுதாப அலைகள் ஒரு முறை தான் கிடைக்கும். எடுத்துக்காட்டுக்கு ஓபிஎஸ் மூன்று முறை முதல்வராக இருந்தார். அவரே வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார். எனவே அரசியல் களத்தில் எந்த சாதனையையும் நிகழ்தாத விஜயபிரபாகரன் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *