“சிபிசிஐடி விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை!" – ஆளுநர் சந்திப்புக்குப் பின் தமிழிசை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணம் தொடர்பாக சென்னை ஆளுநர் மாளிகையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், திருப்பதி நாராயணன் உள்ளிட்ட பா.ஜ.க மூத்த நிர்வாகிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது ஆளுநரிடம், கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாலை வலியுறுத்தியதாக தெரிகிறது.

ஆளுநர் மாளிகையில் பா.ஜ.க நிர்வாகிகள்

ஆளுநரை சந்தித்தப் பிறகு தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “பா.ஜ.க கட்சி நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி இறந்து கொண்டிருப்பதும், நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதும், தமிழ்நாடு அரசு அந்த வழக்கை வழிநடத்திச் செல்லும் முறை சரியாக இல்லை என்பது எங்கள் கருத்து. இந்தக் குற்றத்தில் திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த விசாரணை மாநில அரசைத் தாண்டிச் செல்லாது” என்றார்.

முழு பேட்டி ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *