`சுற்றுப்பயணம் அல்ல, சுற்றுலா பயணம்; ஜானகி அம்மா எடுத்த முடிவை சசிகலா..!’ – ஆர்.பி.உதயகுமார் காட்டம் | RB Udhayakumar controversy press meet at madurai about sasikala

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்று எத்தனையோ வழக்குகள். நீதிமன்றங்களுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் சென்று கட்சியை மீட்டு, கொடியை மீட்டு, வலிமையான இயக்கத்தை உருவாக்கினார். இரண்டு கோடி தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி உடன் நின்ற காரணத்தினால் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர்.
 

33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை செயல்படுத்தினேன் என்று தனக்குத்தானே பிரசாரத்தில் முன்னிலைப்படுத்துகிறார். ஆனால், தான் சார்ந்த சமுதாயத்தினர் வறுமையில் உள்ளார்களே, அவர்கள் கஷ்டம் தீர்க்க என்ன முயற்சி எடுத்தார்? கல்வியில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர். அவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்?  சமுதாயத்தை பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர அந்த மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் இந்த நாடே அவர்கள் பின்னால் நின்றிருக்கும்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் தளபதியாக இருந்த எஸ்.டி.எஸ், திருநாவுக்கரசர், கருப்புசாமி பாண்டியன், காளிமுத்து, அழகு திருநாவுக்கரசு, சத்தியமூர்த்தி, துரைராஜ், பரமசிவம், நயினார் நாகேந்திரன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் என அதிமுகவிலிருந்த மூத்த முன்னோடிகள் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியானதற்கு இன்றைக்கு ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளவர்தான் (சசிகலா) காரணம். சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா பயணம் சென்றிருக்கிறார். கண் கெட்ட பிறகு சூரியன் நமஸ்காரம் என்பது போல உள்ளது

அவர்களுக்கு இருக்கக்கூடிய சொத்துக்கும் பணத்திற்கும் அதிகாரம் கையில் இருந்தும், தமிழ்நாட்டு ஏழை எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மக்களும் உங்களிடம் ஏமாறத் தயாராக இல்லை. பகல் கனவு காண்பவர்களுக்கு நிச்சயம் கனவாகத்தான் போகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புகளை மதிக்க வேண்டும்.

கடந்த 2021 தேர்தலில் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் எனக் கூறியவர் தற்போது மீண்டும் அரசியலில் குதிக்கிறேன் என சொல்கிறார். மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். ஜானகி அம்மாள் எடுத்த முடிவை முன்மாதிரியாக கொண்டு சசிகலா செயல்பட்டால் இரண்டு கோடி தொண்டர்களும் பலன் அடைவார்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியதை செய்தால் நன்றாக இருக்கும். 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக   எந்த கொம்பனாலம் தடுக்க முடியாது…” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *