துவரம் பருப்பு, பாமாயிலுக்கு குறுகிய கால டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

ரேஷன் பொருட்கள் விநியோகிப்பதில் தட்டுப்பாடு என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலுக்கான குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குடும்ப அட்டைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவற்றுடன், சிறப்புப் பொது விநியோக திட்டத்தில் ஒரு லிட்டர் பாமாயில், ஒரு கிலோ துவரம் பருப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்பொருட்கள், தனியாரிடம் இருந்து ஒப்பந்தம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில மாதங்களாக கொள்முதலில் ஏற்பட்ட சிக்கலால், பாமாயில், துவரம்பருப்பு விநியோகத்தில் மந்தம் ஏற்பட்டது.

விளம்பரம்

மே மாதம் வாங்காதவர்களுக்கு ஜூன் மாதத்திலும், ஜூன் மாதம் வாங்காதவர்களுக்கு ஜூலை மாதத்திலும் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதிலும், சில இடங்களில் பாமாயில், துவரம் பருப்பு தட்டுப்பாடும் நிலவியது. பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  
தமிழ்நாடு அரசின் 4 சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!

பொது விநியோகத் திட்டத்தில் எந்தவித தங்கு தடையும் இன்றி பருப்பு மற்றும் பாமாயிலை வினியோகம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விரைவாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது.

விளம்பரம்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *