பஞ்சாயத்து கணக்கு வழக்கு கேட்ட திமுக பிரமுகருக்கு கத்திக்குத்து; சொந்தக்கட்சி நிர்வாகி வெறிச்செயல்! | Tenkasi DMK panchayat executives clash one stabbed

திமுக பிரமுகர்திமுக பிரமுகர்

திமுக பிரமுகர்

இந்த நிலையில், பஞ்சாயத்தில் வரவைக் காட்டிலும், செலவு அதிகமாக இருப்பதை அறிந்த சண்முகம், அதைச் சுட்டிக்காட்டி சேர்மனிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். இது பிடிக்காத சுடலை, “உன்னிடம் பேச வேண்டும்’ எனக் கூறி சண்முகத்தை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அழைத்திருக்கிறார். அதன்பேரில் பஞ்சாயத்து அலுவலகம் சென்ற சண்முகத்திற்கு முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்து சண்முகம் ஸ்கூட்டரில் வீடு திரும்பினார்.‌ அவர் மேலகரம் பஜாரில் நின்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த சுடலை, தன்னுடைய டூவீலரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சண்முகத்தின் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *