மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “புதிய சட்டங்கள் என்று சொல்லப்படுபவற்றில் 90-99 சதவீதம் கட், காப்பி, பேஸ்ட் வேலைதான் நடந்திருக்கிறது. தற்போதுள்ள மூன்று சட்டங்களில் சில திருத்தங்களைச்செய்து சுலபமாக முடித்திருக்க வேண்டியதை இப்படி வீண்விரயம் செய்திருக்கிறார்கள். அவை திருத்தங்களாகவே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். புதிய சட்டங்களில் சில முன்னேற்றங்கள் உள்ளன, அவற்றை மட்டும் நாங்கள் வரவேற்கிறோம். மறுபுறம், பல பிற்போக்கு விதிகள் உள்ளன. சில மாற்றங்கள் அரசியல் சட்டத்திற்கு முரணானவை. சட்ட அறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் பல கட்டுரைகள் மற்றும் கருத்தரங்குகள் வாயிலாக மூன்று புதிய சட்டங்களில் உள்ள கடுமையான குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இது ஆரம்ப காலகட்டத்தில் குற்றவியல் நீதி நிர்வாகத்தை சீர்குலைக்கும். பின்னர் பல்வேறு நீதிமன்றங்களில் சட்டங்களுக்கு பல சவால்கள் ஏற்படும். எனவே, அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் நீதித்துறையின் நவீன கோட்பாடுகளுக்கு இணங்க மூன்று சட்டங்களில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, தி.மு.க வழக்கறிஞர் அணியும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து தி.மு.க. சட்டத்துறை மாநில நிர்வாகிகள் – மாவட்ட அமைப்பாளர்கள் நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில், `மூன்று குற்றவியல் சட்டங்கள் நீதி பரிபாலனத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானதாகவும் இந்திய திருநாட்டினை காவல்துறை ஆதிக்க ஆட்சி நாடாக மாற்றப்படும் என விவாதிக்கப்பட்டதோடு, ஜூலை 5-ம் தேதி அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களின் வாயில் முன்பாக `கண்டன ஆர்ப்பாட்டம்’ நடத்துவது, ஜூலை 6-ம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே உண்ணா விரதப் போராட்டம் நடத்துவது, தமிழ்நாடு முழுவதும் கண்டன கருத்தரங்கங்கள் நடத்துவது’ என மூன்று முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88