புதுச்சேரி: ரேஷன் கடைகளில் இலவச அரிசி `டு’ மாணவர்களுக்கு நீட் பயிற்சி! – 2024-25 பட்ஜெட் ஹைலைட்ஸ் | cm rangasamy presents puducherry finance budget for the year 2024 2025

Ø  காரைக்கால் பிராந்தியத்திற்கென தனியாக ஒரு அருங்காட்சியகம், காரைக்கால் பழைய நீதிமன்ற வளாகத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

Ø  புதுவை கலைமாமணி விருது வழங்குவதில் புகைப்படக் கலையையும், பேச்சுக் கலையையும் சேர்க்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

Ø  நடப்பு நிதியாண்டு முதல் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவை வழங்கப்படும்.

Ø  புதிய ரேஷன் கார்டு வழங்குதல், அதில் பெயர்களை சேர்த்தல், நீக்குதல் போன்றவை பொதுச் சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும்.

Ø  தனியார் பங்களிப்புடன் எத்தனால் மற்றும் சர்க்கரை உற்பத்திக்காக புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Ø  அரசு  மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச புத்தகப்பைகள் மற்றும் காலணிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

Ø  பிராந்திய அளவில் முதல் 10, +2 பொதுத்தேர்வுகளில் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு, தலா ரூ.20,000, ரூ.15,000, ரூ.10,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

Ø  அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் விகிதத்தை உயர்த்த, நடப்பாண்டு முதல் +1 படிக்கும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக ஏற்கெனவே நகர்ப்புறத்தில் இருக்கும் இரண்டு பயிற்சி மையங்களுடன், கிராமப்புற மாணவர்களுக்காக கிராமப்புறங்களில் இரண்டு நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

Ø  மடுகரைப் பகுதியிலுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியை ரூ.15 கோடி செலவில், இந்த நிதியாண்டில் ஒரு முன் மாதிரி கலைக் கல்லூரியாக  மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

Ø  புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் செயற்கை ஹாக்கி திடல் அமைக்கப்படும்.

Ø  காரைக்கால் டி.ஆர்.பட்டினத்தில் சி.எஸ்.ஆர் நிதியின் கீழ், ரூ.1 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு உள்விளையாட்டரங்கம் நடப்பு நிதியாண்டில் கட்டி முடிக்கப்படும்.

Ø  மின் துறையில் பணிபுரிந்த 176 கட்டுமான உதவியாளர்கள் பணி உதவி பெற்றதால் ஏற்பட்ட காலியிடங்களையும், ஏற்கெனவே காலியாக உள்ள 73 இளநிலை மின் பொறியாளர் பணியிடங்களையும் நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பணி நடப்பு நிதியாண்டிலேயே முடிக்கப்படும்.

Ø  மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை ரூ.6,500-லிருந்து ரூ.8,000 ஆகவும், மழைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.3,000-லிருந்து, ரூ.6,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

Ø  சேதராப்பட்டில் ரூ.2.73 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தையும், கலிதீர்த்தாள்குப்பம் மற்றும் தட்டாஞ்சாவடி பகுதிகளில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Ø  மத்திய அரசின் ESI மூலமாக புதுச்சேரி கோரிமேட்டில் ESI மாதிரி மருத்துவமனை மற்றும், அரியாங்குப்பத்தில் இரண்டு மருத்துவர்கள் கொண்ட ESI மருத்துவமனை அமைக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

Ø  இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு நிறுவனத்தில், எலும்பு முறிவு மற்றும் பிற விபத்துகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக வலி நீக்கும் பிரிவு ஒன்று துவக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

Ø  இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு நிறுவனத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக முழு தானியங்கி நோய் எதிர்ப்பு பகுப்பாய்வு (Fully Automated Immuno analyzer), முழு தானியங்கி (Fully Automated Electrophoretic Unit), (iii) ஆஞ்சியோ பிளாஸ்டிக்குக்கான லேசர் த்ரோம்பெக்டாமி F (Laser Thrombectomy Device for Angioplasty), 3D கலர் டாப்ளர் எக்கோ ஸ்கேனர் சிஸ்டம் (3D Colour Doppler Echo Scanner System) மற்றும் (v) விட்ரியோ விழித்திரை அறுவை சிகிச்சைக்காக பின்புற அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் லேசர் பார்வை திருத்தும் கருவிகள் கொள்முதல் செய்யப்படும்.

Ø  நரம்பியல் துறையில் குழந்தைகள் நரம்பியல் பிரிவு உட்பட, 24 மணி நேரமும் உள்நோயாளிகள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மயக்கம் மற்றும் தெளிவற்ற குரலுக்கு சிகிச்சையளிக்க முழு அளவிலான வெர்டிக்கோ ஆய்வகம் அமைக்கப்படும். இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு நிறுவனத்தில் சிறுநீரகவியல் துறையில் லேப்ராஸ்கோபிக்கான உயர்வகை கேமரா, தற்போதுள்ள ESWL இயந்திரத்தை தரம் உயர்த்துதல் மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை அறிமுகப்படுத்தப்படும்.

Ø  காரைக்காலில் இயங்கிவரும் அரசு பொது மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.

Ø  தேசிய சுகாதார ஆயூஷ் திட்டத்தின்கீழ் பள்ளி சுகாதார திட்டமான “ஆயுர்வித்யா” விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துவதற்காக, ரெட்டியார்பாளையம், காந்திநகர் மற்றும் கோரிமேடு ESI மருத்துவமனைகளில் ஆயுஷ் மற்றும் யோகா பிரிவுகள் நிறுவப்படும். இலாசுப்பேட்டை, அரியாங்குப்பம், கோரிமேடு, திருக்கனூர், காரைக்கால் மற்றும் மாஹே பந்தக்கல் ஆகிய இடங்களில் புதிய நலவழி ஓமியோபதி மையங்கள் தொடங்கப்படும்.

Ø  உமாங் (UMANG) கைப்பேசி செயலி மூலம் அனைத்து அரசுத் துறைகளின் சேவைகளை ஒருங்கிணைந்த முறையில் பொதுமக்கள் எளிதில் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *