இதற்கிடையில் தமிழகத்தில் சில இடங்களில் இலவச சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகிறது என்கிற தகவலும் வெளியானது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், “தரமற்ற சைக்கிள் விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவலையடுத்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மாணவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக 16,73,374 தரமான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ‘சிடிஏஎல் (Chemical Testing Analytical Lab) நிறுவனத்தில் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது’ என்றும் சொல்லியிருக்கிறார்கள். தரத்தில் உறுதியாக அரசு இருக்கும் பட்சத்தில் அந்த ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டியதுதானே.. அதை ஏன் செய்யவில்லை.
அதேபோல் எவ்வளவு தொகைக்கு வாங்கினோம் என்கிற தகவலும் இல்லை. முன்பு கூடுதல் விலைக்கு சைக்கிள் கொள்முதல் செய்ததாக சர்ச்சை வெடித்தது. எனவேதான் இந்த முறை கொள்முதல் விலை தொடர்பாக எந்த தகவலும் இல்லை. மேலும் சைக்கிள் கொள்முதல் குறித்து எந்த தகவலும் அரசின் இணையதளத்திலும் வெளிப்படையாக இல்லை. ஆகவே அறிக்கைகள் மூலம் மக்களை ஏமாற்றுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். சைக்கிள் கொள்முதல் விலை, எதன் அடிப்படையில் நிறுவனங்களை தேர்வு செய்தார்கள் என்கிற விவரத்தை வெளியிட வேண்டும். அதுதான் உண்மையான மறுப்பு செய்தியாக இருக்கும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88