`முதல்வர் பதவியை டி.கே.சிவகுமாருக்கு விட்டுக்கொடுங்கள்’- சித்தராமையாவுக்கு கோரிக்கை விடுத்த மடாதிபதி | Karnataka Vokkaliga seer publicly urged CM Siddaramaiah to give his post to DK Shivakumar

கர்நாடகாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 224 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது. அதைத்தொடர்ந்து, யார் முதல்வர் என்ற இழுபறியில், டி.கே.சிவகுமாரின் நிபந்தனைக்கு இணங்க சித்தராமையாவை முதல்வராக நியமித்தது காங்கிரஸ். அதோடு, மாநிலத்தின் ஒரே துணை முதல்வராக நியமிக்கப்பட்ட டி.கே.சிவகுமார் காங்கிரஸின் மாநில தலைவராகவும் தொடர்ந்தார்.

டி.கே.சிவக்குமார், சித்தராமையாடி.கே.சிவக்குமார், சித்தராமையா

டி.கே.சிவக்குமார், சித்தராமையா

இருப்பினும் பதவியேற்புக்குப் பின்னரும், கர்நாடக காங்கிரஸில் உட்கட்சி பூசல் நடப்பதாகவும், டி.கே.சிவகுமார் முதல்வர் பதவி விரும்புவதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் பேச்சுகள் அடிபட்டன. இத்தகைய பேச்சுகள் எழுந்தபோதிலும், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மாதத்தோடு ஓராண்டை நிறைவுசெய்தது. இந்த நிலையில், டி.கே.சிவகுமார் சார்ந்திருக்கும் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த மடாதிபதி ஒருவர், சித்தராமையா தனது முதல்வர் பதவியை டி.கே.சிவகுமாருக்கு விட்டுத்தரவேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *