புதுச்சேரி அரசு மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும். புதுச்சேரியில் விஷவாயு தாக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உயிரிழப்பிற்கான உண்மை நிலை இதுவரை கண்டறியப்படவில்லை. விஷவாயு விவகாரத்தில் நிரந்தர தீர்வை இந்த அரசு இதுவரை எடுக்கவில்லை.
புதுச்சேரியில் வனத்துறை அமைச்சருடைய மகளுக்கு சொந்தமான இடத்தில் இருந்து, சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.2 டன் சந்தன கட்டைகளை தமிழக வனத்துறை பறிமுதல் செய்துள்ளனர். எந்தவித அனுமதியும் இல்லாமல் அந்த தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. அதனால் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். சந்தன கட்டைகள் விவகாரத்தில் தெளிவான அறிக்கையை புதுச்சேரி அரசு சமர்ப்பிக்க வேண்டும்.
ரெஸ்டோ பார்கள் மூலம் புதுச்சேரியில் கலாசார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது. அதனால் மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர். கல்வி நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் உள்ள ரெஸ்டோ பார்களை மூடுவதற்கு முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88