இதைச் சொல்லிக் கேட்டால், அவையில் அமைச்சர்கள் அதை திசைதிருப்புகிறார்கள். மத்திய அரசின் கூட்டணியில்தானே இருக்கிறீர்கள் மத்திய அரசைக் கேளுங்கள் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் 10.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்க மூன்று வருடங்களாகத் தரவுகளைச் சேகரித்துவிட்டு, இப்போது மாநில அரசு இதைச் செய்ய முடியாது மத்திய அரசைக் கேளுங்கள் என்கிறார்கள். இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேட்கிறது. அப்படியென்றால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இதைத் தக்கவைக்க வேண்டாமா…


இது சமூகநீதி பிரச்னை. சட்டமன்றத்தில் இதைக் கேட்டால் கூட்டணி அரசியலைப் பற்றி பேசுகிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசும் நடத்தலாம், மாநில அரசும் நடத்தலாம். மாநில அரசுக்கு அந்த அதிகாரமிருக்கிறது. பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடத்தப்பட்டிருக்கிறது. அங்கெல்லாம் நடத்தும்போது, சமூகநீதியின் பிறப்பிடம் என்று சொல்லும் தமிழ்நாட்டில் நடத்தக் கூடாதா… மாநில அரசு ஏன் நடத்த மறுக்கிறது” என்று கேள்வியெழுப்பினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb