இத்தகைய சூழலில், புதிய மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 18-ம் தேதி தொடங்கவிருக்கிறது என்றும், அதில் மக்களவை சபாநாயகர் யார் என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்றும், அப்போது தற்காலிக சபாநாயகருக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் கேரளா மாநில செயல் தலைவர் கொடிகுன்னில் சுரேஷ் மக்களவையின் தற்காலிக சபாநாயகராக இருப்பார் என்று செய்தி அடிபடுகிறது. அவையில் மூத்த உறுபினராக இருப்பவருக்கு தற்காலிக சபாநாயகர் பதவி அளிக்கப்படுவது வழக்கம். புதிதாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்ப்து உள்ளிட்ட பணிகளை தற்காலிக சபாநாயகர் கவனித்து கொள்வார்.
மக்களவையின் அடுத்த சபாநாயகர் என்ற கேள்வியோடு, மக்களவையின் துணை சபாநாயகர் பதவி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88