இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சியின் அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தும். 2024 தேர்தலுக்கு இன்னும் இரண்டுஆண்டுகளுக்கு குறைவான காலம் தான் இருக்கிறது. அதற்குள் வேறு கட்சியை மக்கள் தேர்வு செய்தால் மவுன புரட்சி என்றுதான் கருத வேண்டும். ஆனால் அதை மக்கள் செய்ய வாய்ப்பு இல்லை. அப்படி செய்து இருந்தால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிராக வாக்குகள் அதிகமாக கிடைத்து இருக்க வேண்டும். விக்கிரவாண்டி தேர்தலில் வன்னியர்கள் வாக்கு அதிகமாக இருக்கிறது. எனவே பாமகவுக்கு குறிப்பிட்ட அளவு வாக்குகள் கிடைக்கும். ஆனால் திமுக 100 ஓட்டுக்கு ஒரு பொறுப்பாளர் என நியமித்து களமாடி வருகிறது.
அந்த வாக்குகளை வாங்கி தரும் பொறுப்பாளர்களுக்குதான் கட்சியில் மரியாதை, பொறுப்பு வழங்கப்படும் என்பார்கள். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைமை சொல்லும். ஆகவே சம்மந்தப்பட்ட பொறுப்பாளர்கள் கவனமாக பணியாற்றுவார்கள். ஆகவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாங்கிய 36,000 வாக்குகளை விட அதிகம் பாமக வாங்கி விட்டாலே அவர்களின் தொண்டர்கள் விலை போகவில்லை. மக்கள் திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்” என்கிறார்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக களத்தில் இல்லாத நிலையில் பாமக என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88