13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல்… இந்தியா கூட்டணி ‘ஆதிக்கம்’ சொல்லும் செய்தி என்ன?!| India bloc swept the by poll winning 10 out of 13 assembly constituencies

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ஏழு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள், பா.ஜ.க.வினர் பின்னியிருந்த அச்சம் மற்றும் குழப்பத்தின் வலை உடைக்கப்பட்டிருப்பதை தெளிவாக்கியுள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், வேலை செய்பவர்கள் என ஒவ்வொரு வர்க்கமும் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக அழித்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகின்றன. பொதுமக்கள் தங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பிற்காகவும் இந்திய அணியுடன் முழுமையாக நிற்கின்றனர். வாழ்க இந்தியா, அரசியல் சாசனம் வாழ்க” என்று கூறினார்.

ராகுல் காந்திராகுல் காந்தி

ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தலில் 237 தொகுதிகளில் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக ‘இந்தியா’ கூட்டணி உருவெடுத்திருக்கும் நிலையில், தற்போது 13 தொகுதிகளில் பெற்றிருக்கும் வெற்றியால் ‘இந்தியா‘ கூட்டணித் தலைவர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். ‘மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெல்வோம்’ என்று பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கூறிவந்த நிலையில், 240 தொகுதிகளைத்தான் பா.ஜ.க பிடித்தது.

இந்தியா கூட்டணி இந்தியா கூட்டணி

இந்தியா கூட்டணி

அதை பிரதமர் மோடியின் தோல்வியாகவும் சித்தரித்த எதிர்க்கட்சிகள், 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைத் தேர்தலில் 10 தொகுதிகளில் பா.ஜ.க தோற்றிருப்பதும் மோடிக்கு கிடைத்தத் தோல்வி என்ற கருத்தைப் பரப்புகின்றன. மேலும், ‘இந்தியா’ கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகவும் அதன் தலைவர்கள் கூறிவருகிறார்கள். அடுத்ததாக, மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அந்த நான்கு மாநிலங்களிலும் நாங்கள்தான் வெல்வோம் என்று ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் கூறிவருகிறார்கள்.

“கடந்த காலங்களில், மத்தியில் ஆளும் பாஜக அரசின் தலைவர்கள், எதிர்க்கட்சிகளை காணவில்லை என பேசினர். பிரதமர் மோடியே நாடாளுமன்றத்தில் அந்த கருத்தை சொல்லி இருந்தார். இந்த நிலையில் வெளி வந்திருக்கும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் அதன் பிறக்கான இடைதேர்தல் முடிவுகளும் பாஜக-வுக்கு பின்னடைவை கொடுத்திருக்கிறது. இதற்கு முழுமையான காரணம், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு. ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளை பாஜக-வால் கடந்த காலங்களை போன்று எளிதாக எத்ர்கொள்ள முடியவில்லை என்பதே தேர்தல் முடிவுகள் காட்டும் முடிவாக இருக்கிறது. இதனால் தனது வழக்கமான வியூகத்தை மாத்த வேண்டிய நிர்ப்பந்தத்திலும் அக்கட்சி உள்ளது.” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *