Emergency குறித்து பேசிய ஜனாதிபதி முர்மு; `மணிப்பூர், NEET எங்கே?’ – கேள்வியெழுப்பும் சசி தரூர் | Congress MP Shashi Tharoor ask question to president murmu about current problems of this country

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 18-வது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த திங்களன்று (ஜூன் 25) நாடாளுமன்றத்தில் கூடியது. முதல்நாளே நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “ஜூன் 25 மறக்க முடியாத நாள். இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயத்தின் 50-வது ஆண்டு நாளை தொடங்குகிறது. அரசியலமைப்பு கிழிக்கப்பட்டு, ஜனநாயகம் நசுக்கப்பட்டு, நாடே சிறைச்சாலையாக மாற்றப்பட்டதை புதிய தலைமுறை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது” என 1975-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய அவசரநிலை (எமர்ஜென்சி) பிரகடனத்தைக் குறிப்பிட்டார்.

மோடி - கார்கேமோடி - கார்கே

மோடி – கார்கே

அன்றே இதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “வினாத்தாள் கசிவு, மேற்கு வங்க ரயில் விபத்து, மணிப்பூர் வன்முறை, தேர்தல் கருத்துக்கணிப்பு பங்குச்சந்தை மோசடி, சாதிவாரி கணக்கெடுப்பு என எதையும் பேசாத மோடி, 50 ஆண்டுக்கால எமர்ஜென்சியை எங்களுக்கு நினைவூட்டுகிறார். ஆனால், கடந்த 10 ஆண்டுக்கால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டார்” என்று ட்வீட் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *