புற்றுநோயாளி குழந்தைகளை குறிவைத்து உக்ரைனில் உள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையை ரஷ்ய ஏவுகணை தாக்கியது. பலர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கின்றனர். ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிக ரத்தம் தோய்ந்த குற்றவாளியை மாஸ்கோவில் கட்டிப்பிடித்ததைப் பார்ப்பது, அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றமும் பேரழிவு தரும் அடியுமாகும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கிடையில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினிடம், “போரால் எந்த தீர்வும் எட்டமுடியாது. பேச்சுவார்த்தை, இராஜதந்திர நடவடிக்கைகளே நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லும் வழி” என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.