மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்று, முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தின் ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் நீட் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைக் கையிலெடுத்து, ஆளும் அரசுக்கு எதிராகப் பேசி வருகின்றன. இதற்கிடையில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை நிகழ்த்தினர்.
அதில், மணிப்பூர் விவகாரம், நீட் முறைகேடு விவகாரம், தேர்தல் பத்திர விவகாரம், ரயில் விபத்து விவகாரங்கள், எதிர்க்கட்சிகள் மீது விசாரணை ஏஜென்சிகள் மூலம் நடவடிக்கை எடுத்தது, அதானி, அம்பானி தொடர்பான குற்றச்சாட்டு, தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டது தொடர்பான குற்றச்சாட்டுகள், பா.ஜ.க தலைவர்கள் வெறுப்பைப் பரப்புவது தொடர்பாக சர்ச்சைகள், அரசியல் சாசனம் மீதான தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகள்,