இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு பெரிய அறிவிப்புகளோ, நிதி ஒதுக்கீடோ இல்லை என்பதால், தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்கிறார் என்று தி.மு.க வட்டாரத்தில் கூறுகிறார்கள்.


மத்திய பட்ஜெட்டையும், பா.ஜ.க அரசையும் கடுமையாக விமர்சித்திருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்று தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்வது என்று அவர் முடிவுசெய்திருக்கிறார். மேலும், ‘நிதி ஆயோக் என்ற அமைப்பைக் கலைத்துவிட்டு, முன்பு இருந்த திட்ட கமிஷனை மீண்டும் கொண்டுவர வேண்டும்’ என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். “இதற்கு முன்பு இருந்த திட்ட கமிஷன் நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரங்களை வைத்திருந்தது. ஆனால், வெறும் கொள்கை வகுக்கும் அமைப்பாகத்தான் நிதி ஆயோக் இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, நிதி ஆயோக் கூட்டத்தை அவர் புறக்கணித்திருக்கிறார். 2021-ல் எட்டு முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள்.