அப்போது அமலாக்கத்துறையிடம் உச்ச நீதிமன்றம், காட்டமாகச் சில கேள்விகளை எழுப்பியது. அதைத் தொடர்ந்து இரு தரப்பு வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்த நிலையில் இன்று (14-08-2024) செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல்முறையீடு மனு வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வியுடன் அரசியல் ஆர்வலர்கள் வழக்கை ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.
இன்று காலை தொடங்கிய இந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “மூன்று வழக்குகளில் தொடர்புடைய செந்தில் பாலாஜியை மீதமிருக்கும் இரண்டு வழக்குகளில் விசாரிக்கப் போகிறீர்களா… அந்த வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டோர் தொடர்பிருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் அனைவரையும் விசாரிக்கப் போகிறீர்களா?” என அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.