இந்த நிலையில், தற்போது ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் தடேபள்ளியில் கட்டப்பட்டு வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகம், சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறி இன்று காலை 5:30 மணியளவில் மங்களகிரி – தாடேபள்ளி மாநகராட்சியின் (எம்டிஎம்சி) அதிகாரிகள் புல்டோசர்களைப் பயன்படுத்தி இடித்திருக்கின்றனர். இந்த நடவடிக்கை தொடர்பாக ஒய்.எஸ்.ஆர்.சி கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, “முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.


உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் புறக்கணித்து, ஒரு சர்வாதிகாரி போல, ஒய்.எஸ்.ஆர்.சி.பி-யின் மத்திய அலுவலகத்தை புல்டோசர்களைக் கொண்டு இடித்திருக்கிறார். இந்தச் செயல்கள் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தனது ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து நாயுடு ஒரு செய்தியைத் தருகிறார். எவ்வாறாயினும், இந்த அச்சுறுத்தல்கள் மற்றும் அரசியல் பழிவாங்கல்களுக்கு முன் கட்சி எப்போதும் தலைவணங்காது. சந்திரபாபு நாயுடுவின் இந்த செயல்களை கண்டிக்கிறேன்… மக்கள் சார்பாக போராடுவேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88