இர்ஃபான் விவகாரத்தில் இடி மேல் இடி… விழிபிதுங்கும் தமிழக அரசு… மத்திய அரசிடம் சரணாகதி?! | Irfan’s apology was graciously accepted by the TN Government

இதற்கிடையே, இர்ஃபான் மீதான அரசின் மென்மையான இந்தப் போக்கை பெண் உரிமை செயற்பாட்டாளர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டித்து வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் வெரோணிக்கா, சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் செல்லப் போவதாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ஜவாஹிருல்லா ஜவாஹிருல்லா

ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, ‘தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள இர்ஃபானுக்குக் கருணை காட்டக்கூடாது. சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இப்படி பல பக்கங்களிலிருந்தும் தொடர்ந்து இடி விழுவதால், இந்த விஷயத்திலிருந்து இர்ஃபானை மட்டுமல்ல, தன்னையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அடுத்தக்கட்டமாக மத்திய சுகாதாரத் துறையிடம் தமிழக அரசு சரண்டர் ஆகப்போவதாக கூறப்படுகிறது. அதாவது, என்னதான் மாநில அரசு முடிவெடுத்தாலும், மத்தியில் இந்த விஷயங்களைக் கண்காணிப்பதற்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு வாரியம்தான் இறுதி முடிவெடுக்க முடியும். எனவே, அங்கிருப்பவர்களிடம் பேசி சரிக்கட்டிவிட்டால், பிரச்னை முடிந்தது என்கிற யோசனையோடு டெல்லிக்குக் காவடி தூக்க ஆரம்பித்திருப்பதாகக் கேள்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *