அதனால், உத்தரப்பிரதேச அரசியலிலும், ஊடகங்களிலும் ஆகாஷ் ஆனந்த் பெயர் மீண்டும் அடிபடுகிறது. மாயாவதியின் அண்ணன் ஆனந்த்குமாரின் மகனான ஆகாஷ் 1995-ம் ஆண்டு பிறந்தவர். இங்கிலாந்தில் எம்.பி.ஏ படித்த இவர்,2016-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். அப்போது அகிலேஷ் யாதவ், அஜித் சிங் போன்ற முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் சஹரான்பூரில் நடைபெற்றது. ஆகாஷ் ஆனந்துக்கு அதுதான் முதல் மேடை.
காங்கிரஸையும், பா.ஜ.க-வையும் எதிர்த்து ஆக்ராவில் 2019-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில்தான் முதன்முறையாக ஆகாஷ் ஆனந்த் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சிக்குள் அவரது செல்வாக்கு அதிகரித்தது. தீவிரமாக கட்சிப்பணிகளில் ஈடுபட ஆரம்பித்து, தன் அத்தையும், கட்சியின் தலைவருமான மாயாவதிக்கு பக்கபலமாக இருந்தார். ஆகவேதான், அவரை தன் அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்தார்.
பா.ஜ.க-வுடன் கூட்டணி சேரவில்லையென்றாலும், பா.ஜ.க-வுக்கு சாதகமான அரசியல் நிலைப்பாடுகளை மாயாவதி எடுத்துவருகிறார். இந்த நிலையில், பா.ஜ.க-வை விமர்சித்து ஆகாஷ் பேசிவிட்டார். அதனால், ஏராளமான வழக்குகளை எதிர்நோக்கிவரும் மாயாவதி, பா.ஜ.க-வின் கோபத்துக்கு ஆளாவதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும் விதமாக ஆகாஷ் ஆனந்த் மீது நடவடிக்கை எடுத்தார்.
மக்களவைத் தேர்தலில் மாயாவதி ஒரு தொகுதியில்கூட ஜெயிக்காத நிலையில், ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்) தலைவர் சந்திரசேகர ஆசாத், நஜினா மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் தலித் அரசியலை சந்திரசேகர ஆசாத் தீவிரமாக முன்னெடுத்துவரும் பின்னணியில்தான், ஆகாஷ் ஆனந்தை தன் அரசியல் வாரிசாக அறிவிக்கும் முடிவை மாயாவதி எடுத்திருக்கிறார் என்கிறார்கள் உ.பி-யைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர்கள்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88