கள்ளச்சாராய மரணங்கள்: “சிபிஐ விசாரணை எதற்கு… தேவையில்லை” – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி | TN minister ragupathi press meet regarding kallakuruchi issue

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் எத்தனை பெரிய பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் நாங்கள் எதையும் மறைக்கவில்லை அதனால் , சிபிஐ விசாரணை நடத்த தேவையில்லை. இதற்கு முன்னர் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கு. பண்ருட்டியில் நடந்த சம்பவத்திற்கு சிபிஐ விசாரணையா நடத்தினர்? அன்றைக்கு விசாரணை கமிஷன் நடத்தினார்களா? ஆனால், திமுக அரசு சிபிசிஐடி விசாரணை, கமிஷன், நிவாரணம் வழங்கியுள்ளது.

சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்தபோது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அந்த சம்பவத்தையே மறைக்கப் பார்த்தார். அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஃபெலிக்ஸ் மூச்சித் திணறலில் இறந்தார், ஜெயராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக எடப்பாடி பழனிசாமி கூறினார். இதனால்தான், திமுக அன்றைக்கு சிபிஐ விசாரணை கோரியது.

ஆனால், நாங்கள் இன்றைக்கு எதையும் மறைக்கவில்லை. வெளிப்படையாகத் தான் இருக்கிறோம். எனவே, சிபிஐ விசாரணை தேவையில்லை. கள்ளச்சாராயத்தில் எங்களுக்கு என்ன தேவை, என் அவசியம் இருக்கிறது? கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் முனைப்பில் திமுக அரசு உள்ளது. நிச்சயமாக இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *