தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் கைது! – அதிர்ச்சிக் கொடுத்த இலங்கை கடற்படை | pudukkottai fisherman arrested by srilankan army

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப் பட்டிணத்திலிருந்து 241 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில், சிபிராஜ் என்பவரின் படகில் மீன்பிடிக்கச் சென்ற பாலச்சந்திரன், சாரதி, முரளி, ராம்தாஸ் ஆகிய நான்கு மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் எல்லை தாண்டி சட்ட விரோதமாக மீன்பிடித்ததாகக் கூறி அவர்கள் நால்வரையும் கைது செய்தனர். பின்னர், இலங்கை கடற்படையினர் கைது செய்த அந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள்கைது செய்யப்பட்ட மீனவர்கள்

கைது செய்யப்பட்ட மீனவர்கள்
தே.தீட்ஷித்

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கேள்விப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 60 நாள்கள் மீன்பிடி தடைக்காலத்திற்கு பின்பு கடந்த சனிக்கிழமை முதல் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில், இலங்கை கடற்படையினர் மீண்டும் தங்களது கைது சம்பவத்தை தொடங்கியிருப்பது, ஒட்டுமொத்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாக, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதோடு, தொடர்ந்து நிலவும் இந்த பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தடைக்காலம் முடிந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் நான்கு பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *