`திரும்பி வர விரும்புவர்கள் வரலாம்..!’ – அஜித் பவார் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு சரத் பவார் அழைப்பு | Those who want to come back can come: Sharad pawar calls on Ajitpawar party MLAs

இதேபோன்று முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இருந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு வர 3 எம்.எல்.ஏ.க்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்களை கட்சியில் சேர்ப்பது குறித்து உத்தவ் தாக்கரே இன்னும் முடிவு எடுக்கவில்லை.

ஏக்நாத் ஷிண்டேஏக்நாத் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே

கடந்த சில நாள்களுக்கு முன்பு பா.ஜ.கவில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் சூர்யகாந்தா பாட்டீல் மீண்டும் தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சியில் சேர்ந்தார். அவர் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் சேர்ந்தார். 4 முறை எம்.பி.யாக இருந்துள்ள சூர்யகாந்தா பாட்டீல் நாண்டெட், பர்பானி, ஹின்கோலி, ஜல்னா போன்ற மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க தலைவர் ஆவார். அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகியது மராத்வாடா பகுதியில் பா.ஜ.க-வுக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. மக்களவை தேர்தலில் ஹின்கோலி தொகுதியில் போட்டியிட சூர்யகாந்தா பாட்டீல் விருப்பம் தெரிவித்தார். ஆனால் அத்தொகுதியை பா.ஜ.க முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு விட்டுக்கொடுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *