“நீதிபதி சந்துரு அறிக்கையில் மாணவர்கள் மதுபோதைக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதை அரசு தான் பொறுப்பேற்று தடுக்க வேண்டும். மாணவர்கள் மீது பழி போடக் கூடாது. நெற்றியில் திலகமிடக் கூடாது, கயிறு கட்ட கூடாது என்கிறார். ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான் கையில் கயிறு கட்டுகிறார்கள், திலகமிடுகிறார்கள். இது மத பாகுபாட்டை காட்டுகிறது. மூன்றாம் வகுப்பு பாடத்தில் மாணவர்கள் ஒன்றாக இருக்கும் படத்தில் ஒரு மாணவன் தலையில் தொப்பி அணிந்திருக்கிறான்.
இது மத உணர்வை தூண்டாதா, கயிறு கட்டுவது தான் மத பிரச்னையை ஏற்படுத்துமா?’ எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அந்த அறிக்கையை கிழித்துவிட்டு `இது குப்பைத் தொட்டிக்கு தான் செல்லவேண்டும்’ எனக் கூறினார். பிறகு இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த தமயந்தி, அதிமுகவைச் சேர்ந்த செளந்திரபாண்டி உள்ளிட்டோர் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இதனை கூட்டத்தில் வைத்து எதிர்க்க வேண்டியதில்லை என குரல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து கூட்டம் முடிக்கப்பட்டது.
ஊராட்சிக் குழு கூட்டத்தில் வைத்து குழுவின் துணை தலைவர் ராஜபாண்டி நீதிபதியின் அறிக்கையை கிழித்த நிகழ்வு தேனியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88