மகாராஷ்டிரா `டு' ஜார்க்கண்ட்; சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் பாஜக… பொறுப்பாளர்கள் நியமனம்!

மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் முடிந்து ஒரு மாதம் முடியும் முன்பாக, சட்டமன்றத் தேர்தலுக்கான வேலையில் பா.ஜ.க தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டது. மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-விற்கு மகாராஷ்டிராவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவிற்கு முக்கியத்துவம் கொடுக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 41 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது நடந்த தேர்தலில் வெறும் 17 தொகுதிகளில் மட்டும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மும்பை உட்பட மாநிலம் முழுவதும் மேயர் தேர்தல் நடக்க இருக்கிறது.

பாஜக

இந்தத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பா.ஜ.க மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் புபேந்தர் யாதவ், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரை நியமித்துள்ளது.

புபேந்தர் யாதவ்

மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு கடைசி வரை இழுத்தடித்தது. அது போன்ற ஒரு நிலை சட்டமன்றத் தேர்தலில் ஏற்படக் கூடாது என்பதற்காக சட்டமன்றத் தேர்தல் பணிகளை உடனே தொடங்கும்படி கட்சித் தலைமை மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அஸ்வினி வைஷ்ணவ்

அதோடு புபேந்தர் யாதவ் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கடந்த ஆண்டு நடந்த மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர். இத்தேர்தலில் பா.ஜ.க 163 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவேதான் அவர்கள் மகாராஷ்டிரா பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று ஹரியானா மாநில சட்டமன்றத் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும், அவருக்கு உதவியாக முன்னாள் திரிபுரா முதல்வர் பிப்லாப் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிவராஜ் சிங் சௌகான்

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர்களாக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹானும், அவருக்கு உதவியாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் சட்டமன்றப் பணிகளை கவனிக்க மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹிமந்தா பிஸ்வா சர்மா

ஹரியானாவில் கடந்த மக்களவைத் தேர்தலில் அனைத்து எம்.பி தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பா.ஜ.க, இம்முறை எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *