`ராஜ்பவனில் மாநில போலீஸால் எனக்குப் பாதுகாப்பு இல்லை!’ – மம்தா அரசைக் குற்றம்சாட்டும் ஆளுநர் | I am insecure with Kolkata Police in Raj Bhavan, says west bengal governor CV Ananda bose

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை இதற்கு முன்னிருந்த ஆளுநர் ஜெக்தீப் தன்கரும் சரி (தற்போதைய துணை குடியரசுத் தலைவர்), தற்போதைய ஆளுநர் சி.வி.ஆனந்த போஸும் சரி, மாநில அரசுடன் அடிக்கடி மோதல் போக்குடனே செயல்பட்டு வந்தனர். முதல்வர் மம்தா பானர்ஜியும் அவ்வாறே செயல்பட்டு வந்தார். இத்தகைய சூழலில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் இருக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரி உட்பட அனைவரும் வெளியேற ஆளுநர் ஆனந்த போஸ் உத்தரவிட்டிருந்தார்.

மம்தா பானர்ஜி - சி.வி.ஆனந்த போஸ்மம்தா பானர்ஜி - சி.வி.ஆனந்த போஸ்

மம்தா பானர்ஜி – சி.வி.ஆனந்த போஸ்

அதோடு, மாளிகைக்கு வெளியே உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்தைப் பொதுமக்களின் மேடையாக மாற்ற திட்டமிட்டிருப்பதாகவும் ஆனந்த போஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் மாநில காவல்துறையால் தனக்கு பாதுகாப்பு இல்லை என ஆனந்த போஸ் இன்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *