‘ரிப்போர்ட்… போன்கால்… சமரசம்’ அண்ணாமலை – தமிழிசை திடீர் சந்திப்பு பின்னணி! | Annamalai – Tamilisai sudden meeting background!

அதற்கு தமிழிசை, ‘நாலு பேர் நாலு விதமா பேசினா, அவங்க மேலே கடும் நடவடிக்கை எடுக்கணும். பேசவிட்டுட்டு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. ஒரு கட்சித் தலைவராக நீங்க அதைச் செய்யணும்னு நான் எதிர்பார்க்கிறேன்’ என தன் நிலைப்பாட்டை உறுதிப்பட தெரிவித்திருக்கிறாராம். அமைதியாக இருந்த அண்ணாமலை, ‘சரிக்கா, இனி ஒன்னா சேர்ந்து பயணிப்போம். நமக்கு பா.ஜ.க-வோட வளர்ச்சிதான் முக்கியம். உங்க ஆலோசனையெல்லாம் எனக்கு அவசியம்’ என்றபடி, தான் கொண்டுவந்திருந்த ஸ்வீட் பாக்ஸை தமிழிசையிடம் அளித்துவிட்டுப் புறப்பட்டார். இந்தச் சந்திப்பின் மூலமாக, இருதரப்புக்கும் இடையே நீடித்துவந்த பனிப்போர் தற்போதைக்கு ஓய்ந்திருக்கிறது. ஆனால், முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை.

தன் மனதுக்கு தவறு எனப்பட்டதை, வெளிப்படையாகப் போட்டுடைக்கும் குணமுள்ளவர் தமிழிசை. அமித் ஷாவுடனான சந்திப்புக் குறித்து விளக்கமளித்தபோதே, ‘தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறியிருந்தார். அவரால், அண்ணாமலையின் ‘ஒன் மேன் ஷோ’ அரசியலை ஒருபோதும் ஜீரணித்துக் கொள்ள முடியாது. இருவரையும் சந்திக்க வைத்து, சமரசரத்தை உருவாக்கி, உட்கட்சி மோதலை முடிவுக்குக் கொண்டுவரப் பார்க்கிறது டெல்லி. இப்போதைக்குக் காற்றின் தீவிரம்தான் ஓய்ந்திருக்கிறதே தவிர, புயல் இன்னும் கரையைக் கடக்கவில்லை” என்றனர் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *