“நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிய விதம், கட்சிக்காரர்களுடன் இணக்கமாக இருப்பது, அவர்மீது எழுந்த புகார்கள் உள்ளிட்டவை குறித்து தலைமை ஒரு பெரிய லிஸ்ட்டே தயார் செய்து வைத்திருக்கிறது.” எனப் பேசத் தொடங்கினார் சீனியர் அமைச்சர் ஒருவர். மேலும் தொடர்ந்தவர், “புகார்கள் எழுந்தவர்களில் முதலிடத்தில் இருந்த கோவை மற்றும் நெல்லை மேயர்களை மாற்றுவதாக முடிவு செய்து ராஜினாமா கடிதம் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறது. இவர்கள் மட்டுமல்ல மதுரை மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்கள்மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. அவர்களை அழைத்து எச்சரித்து அனுப்பியிருக்கிறது தலைமை. இவர்கள் மட்டுமல்ல, 13 முதல் 14 பேரூராட்சி தலைவர்கள், 7 நகராட்சித் தலைவர்களிடமும் கடிதம் வாங்கி வைத்திருக்கிறது தலைமை. இவர்கள் எல்லோருடைய பதவியும் அடுத்தடுத்து காலியாகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவதற்குள் இவை ஒவ்வொன்றாக அரங்கேறும்.” என்றவர்…
“ஒவ்வொரு மண்டலத்திலும் லீஸ்ட் பெர்ஃமாமென்ஸில் இருக்கும் இரண்டு கவுன்சிலர்களிடமும் ராஜினாமா கடிதம் வாங்கி வைத்திருக்கிறார்கள். இவர்களையெல்லாம் அமைச்சர் நேரு அழைத்து எச்சரித்து அனுப்பியிருக்கிறார். இனியும் அவர்கள்மீது புகார் எழுந்தால், அவர்களது பதவி பறிக்கப்படும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb