Biden Vs Trump: `ட்ரம்ப் குற்றவாளி’ ; `உங்கள் மகன் தான் குற்றவாளி’ – 90 நிமிடங்கள் அனல்பறந்த விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், CNN செய்தி நிறுவனம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-க்கும் இடையே நேரடி விவாதம் நடக்க ஏற்பாடு செய்திருந்தது. அதன் அடிப்படையில், பார்வையாளர்கள் இல்லாத அரங்கில், இரு தலைவர்கள் மட்டுமே சில அடிகள் தூரத்தில் நிறுத்தப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. சுமார் 90 நிமிடங்கள் நடந்த இந்த விவாதத்தில் ஒருவர் பேசும்போது மற்றவருடைய மைக் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. வாய்ப்பு வரும்போதுதான் பேச முடியும் என்ற சூழல் உருவாக்கப்பட்டிருந்தது.

டொனால்ட் ட்ரம்ப் – ஜோ பைடன்

மேலும், இந்த விவாதம் அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து தளத்திலும் ஒளிபரப்பப்பட்டது. இரு தலைவர்களும் பொருளாதார பிரச்னைகள், வெளியுறவுக் கொள்கை, சர்வதேச நெருக்கடிகள், நாட்டின் குடியேற்ற நெருக்கடி, அமெரிக்க ஜனநாயகத்தின் நிலை என மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டனர். உலக நாடுகளே கூர்ந்து நோக்கிய அந்த விவாதத்தின் முக்கிய அம்சங்கள்…

ஜோ பைடன்: “2021-ல் அதிபராக பதவியேற்றபோது, ​​பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியில் இருந்தது. அந்த குழப்பத்திலிருந்து பொருளாதாரத்தைக் காப்பாற்றி, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. மருந்து விலைகள் குறைக்கப்பட்டது. நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து வந்தேன்.”

டொனால்ட் ட்ரம்ப் – ஜோ பைடன்

ட்ரம்ப்: “என் ஆட்சி காலத்தில் பொருளாதார நிலை சீராகதான் இருந்தது. தற்போது ஏற்பட்டிருக்கும் விலை உயர்வுக்கு யார் காரணம்… பணவீக்கம் நம் நாட்டைக் கொன்று கொண்டிருக்கிறது. பைடன் ஆட்சியில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது உண்மை தான், ஆனால் அது முறைகேடாகக் குடியேறியவர்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது. அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.”

ஜோ பைடன்: “கருக்கலைப்பு அணுகலைத் தடுப்பதில் ட்ரம்பின் பங்குதான் அதிகம்”

ட்ரம்ப்: “கருக்கலைப்பு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டேன். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கருக்கலைப்பு மருந்து விநியோகங்களை தடுக்க மாட்டேன். பைடன் ஆப்கானிஸ்தானிலிருந்து நமது ராணுவ வீரர்களை திரும்பப் பெற்றது நமது நாட்டின் வரலாற்றில் மிகவும் சங்கடமான நாள். உறுதியான தலைவர் இருந்திருந்தால் உக்ரைன் போர் தொடங்கியிருக்காது.”

டொனால்ட் ட்ரம்ப்

பைடன்: “ட்ரம்ப் ஒரு குற்றவாளி அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதலை தடுக்க அவர் எதுவும் செய்யவில்லை. தலைநகரைத் தாக்கியவர்களைக் கண்டிப்பீர்களா?”

ட்ரம்ப்: “உங்கள் மகனே ஒரு குற்றவாளி. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அது அனைத்தும் எனக்கு எதிராக மோசடியான அமைப்பால் செய்யப்பட்டது. நான் யாருக்கும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. என் மீதான வழக்குகள் மேல்முறையீடு செய்யப்படும். என் நற்பெயரை சேதப்படுத்துவதற்காக இதைச் செய்கிறார்கள். ஆனால் மக்கள் உண்மையைப் பார்க்கிறார்கள்.”

ஆப்கானிஸ்தான் , உக்ரைன், காசா போர் என இரு தரப்பும் மாறி மாறி காட்டமான விமர்சனங்களை முன்வைத்தனர். அதேநேரம் இந்த விவாதத்தில் ட்ரம்ப் ஆதிக்கம் செலுத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கும் பகுதியில் டிரம்ப் சுமார் 23 நிமிடங்கள் பேசினார். அதேநேரம் பைடன் 18 நிமிடங்கள் மட்டுமே பேசினார். பைடன் பேசும் போது பல இடங்களில் திக்கித் திணறினார். பலமுறை இருமிக் கொண்டே இருந்தார். அவரால் நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் பேச முடியவில்லை.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *