அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா, “ரஷ்யாவின் மருத்துவமனை தாக்குதலில் அப்பாவிகளின் மரணம் குறித்து கவலையும் வருத்தமும் தெரிவிப்பதில் பிரதமர் மோடி மிகவும் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இருந்தார். இந்த மோதலுக்கான தீர்வை போர்க்களத்தில் காண முடியாது என்றும் அது உரையாடல் மற்றும் இராஜதந்திரத்தின் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்றும் தெளிவாகச் சொன்னார்.


சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, குறிப்பாக எரிசக்தி, வர்த்தகம், உற்பத்தி மற்றும் உரங்கள் ஆகிய துறைகள் குறித்து பேசியது முக்கிய அம்சமாக இருந்தது. மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதில் இந்தியா ஒரு முக்கிய நாடாக மாறியுள்ளது. இந்தியா – ரஷ்யா உறவுகள் மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர், எரிசக்தி துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு உலகிற்கும் உதவியது எனத் தெரிவித்திருக்கிறார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88