இந்த நிலையில், தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் முறைகேடுகள் செய்திருந்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.
தனியார் ஊடகத்திடம் பேசுகையில், தேசிய தேர்வு முகமையில் மேம்பாடு தேவை என்று ஒப்புக்கொண்ட தர்மேந்திர பிரதான், “உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில், 1,563 தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு இடங்களில் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.