New Criminal Laws: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்; வழக்கறிஞர்கள் கூறும் காரணமென்ன?! | advocates protest against new criminal laws

இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் எம்.கருணாநிதியிடம் பேசினோம். “இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகள் அப்படியே நினைவில் இருக்கின்றன. இந்த நிலையில், புதிய சட்டங்களில் பிரிவுகளின் எண்களை மாற்றியிருப்பதால் குழப்பங்கள் ஏற்படும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது புதிய சட்டப்பிரிவுகள், பழைய சட்டப்பிரிவுகள் தொடர்பான விளக்கங்களை ஒவ்வொரு முறையும் கொடுக்க வேண்டியிருக்கும்.

ஏற்கெனவே, நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. புதிய குற்றவியல் சட்டங்களால் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது, காவல்துறையினருக்கு சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க வருபவர்கள் ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி ஆகிய சட்டங்களைப் படித்திருப்பதுடன் அனுபவ ரீதியாகவும் வகுப்பெடுப்பார்கள். இனி, புதிய சட்டங்கள் குறித்து வகுப்பெடுக்க வருபவர்களும் மாணவர்களைப் போலத்தான் வருவார்கள். அதாவது, ஆசிரியரும் மாணவர்களும ஒரே நிலையில் இருக்கப்போகிறார்கள். இது மிகவும் சிரமம்.

எம்.கருணாநிதிஎம்.கருணாநிதி

எம்.கருணாநிதி

மாற்றங்கள் அவசியம் என்று சொல்கிறார்கள். ஆனால், இவ்வளவு அவசரப்பட்டு மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க வேண்டாம். அன்றாடம் பயன்படுத்தும் விஷயம் என்பதால், போகப் போக சரியாகிவிடும் என்றும் சொல்லிவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும் நேரத்தில், பிரச்னைகளும் அதிகரிக்கும். இது நமக்கு ஒரு சோதனை காலம்தான்” என்கிறார் கருணாநிதி.

புதிய குற்றவியல் சட்டங்களால் பிரச்னைகள் அதிகரிக்கும்போது, அதற்கு எதிராக மற்ற மாநிலங்களிலும் போராட்டங்கள் தொடங்கும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *