சரத் பவார் கட்சியை சேர்ந்த இளம் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தீப், பிரஜக்த் தன்புரே ஆகியோர் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் சரத் பவார் கட்சிக்கு புதிதாக 6-க்கும் மேற்பட்ட புதிய தலைவர்களை உருவாக்கி கொடுத்து இருக்கிறது. இது அஜித் பவார் கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு அஜித் பவார் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் இரண்டு பேர் சரத்பவார் அணியோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்தி கசிந்துள்ளது. இந்த சிக்கலில் இருந்து எப்படி வெளியில் வருவது என்று தெரியாமல் அஜித்பவார் திணறிக்கொண்டிருக்கிறார். அதோடு பாராமதி மற்றும் சிஷீர் தொகுதி முடிவுகளைத்தான் அஜித் பவாரால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.


பாராமதியில் தனது மனைவி தோல்வி அடைந்தாலும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைவார் என்று அஜித் பவார் எதிர்பார்த்தார். ஆனால் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே வெற்றி பெற்று இருப்பதை அஜித் பவாரால் ஏற்க முடியவில்லை. இதனால் சட்டமன்ற தேர்தலுக்கு எப்படி பா.ஜ.கவிடம் அதிகப்படியான தொகுதிகளை கேட்பது என்று தெரியாமல் அஜித் பவார் திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88